×

விளாத்திகுளத்தில் இயற்கை மருத்துவ மூலிகை விழிப்புணர்வு கருத்தரங்கம்

விளாத்திகுளம், டிச. 31: விளாத்திகுளத்தில் இயற்கை மருத்துவ மூலிகை தோட்டம்  அமைத்தல் மற்றும் மூலிகைகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.சத்ய சாய் சேவா சமிதி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சார்பில் இயற்கை மருத்துவ மூலிகை தோட்டம்  அமைத்தல் மற்றும் மூலிகைகளின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு விளாத்திகுளத்தில் நடந்தது. விளாத்திகுளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இக்கருத்தரங்குக்கு சத்ய சாய் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மாரியப்பன் தலைமை வகித்தார். சத்ய சாய் சேவா சமிதி நிர்வாகிகள் பி.எம்.வி. காளிராஜன், செந்தில்வேல் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் வீட்டு வளாகங்கள் மற்றும் மாடிகளில் இயற்கை மருத்துவ மூலிகை தோட்டம் அமைத்தல் மற்றும் கிராமப்புறங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகளின் மருத்துவ பயன்பாடு குறித்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் தமிழமுதன், நாகலாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் விஜயலதா, புதூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சாந்தி சிறப்புரையாற்றினர். மூலிகை தாவரங்கள் குறித்த கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.  இதைத் தொடர்ந்து மூலிகைகளும், அவற்றின் பயன்பாடுகளும் குறித்த துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.  கருத்தரங்கில் மருத்துவர்கள் இந்துமதி, பேபி பொன் அருணா, சத்ய சாய் சேவா சமிதி உறுப்பினர்கள் நாராயணன், தர்மர், சமூக ஆர்வலர் துரையரசன், சித்தா மருந்தாளுநர் தமிழ்ச்செல்வி, பேரூராட்சி பணியாளர்கள் முனீஸ்வரன், செல்வகுமரன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு